Friday, May 20, 2011

''உயரமாக வளர உளுந்து தைலம் உதவும்!'' (அவள் விகடன்)


குழந்தைகள் ஆரோக்கியமாக வளர சித்தவைத்தியம் எனும் நம்முடைய பாரம்பரிய வைத்தியம் என்ன சொல்கிறது? அதைப் பற்றி சென்னை, தாம்பரம், தேசிய சித்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் சித்த மருத்துவர் வேலாயுதம் இங்கே பேசுகிறார்.

''
ரத்த ஓட்டம் உடலில் பாய்கிற மாதிரியான செயல்களைச் செய்யாதபோது உயரம் தடைப்படலாம். கூன் போட்டபடி, சாய்ந்தபடி நாற்காலியில் உட்காருவதால் எலும்பின் வளர்ச்சி தடைப்படும். இப்போதைய குழந்தை களுக்கு அசைவு என்பது கொஞ்சம்கூட இல்லை. பலரும், 'கறுத்துவிடுவான்' என்று வெயில்படாமல் வளர்க்கிறார்கள். இதெல்லாமே எலும்பு வளர்ச்சியைத் தடைபோடும் விஷயங்கள்தான்.
உளுந்து தைலத்தை வாங்கி (நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும்), காலையில அரை மணி நேரம், மாலை ஒரு மணி நேரம் உடம்பில் தடவி விளையாட விடவேண்டும். எகிறி குதித்துத் துள்ளி விளையாட பழக்க வேண்டும். இவையெல்லாம் உயரமாக வளர்வதற்கான வழிகள்!" என்று சொன்ன வேலாயுதம், முக்கியமான சில டிப்ஸ்களை பட்டியலிட்டார்...
பிறந்தது முதல் ஆறு மாதங்கள், தாய்ப்பால் மட்டுமே உணவாக இருக்கவேண்டும். மருத்துவ குணம் வாய்ந்த தாய்ப்பால் குடிக்கும் குழந்தை ஒல்லியாக இருந்தாலும், எதிர்ப்புச் சக்தியும், நல்ல ஆரோக்கியத்துடனும் இருக்கும்.
நன்றாக தண்ணீர்விட்டு தலைக்கு குளிப்பாட்டுவது, உடல் வளர்ச்சிக்கு அஸ்திவாரம். குழந்தை ஒரு களிமண் போல்தான். குளிப்பாட்டும்போது, கை, கால்களை நன்றாக இழுத்துவிடவேண்டும். எலும்பு வளர்ச்சிக்கு நல்லது.
ஆறாவது மாதம் முதல்... வெந்த புழுங்கல் அரிசிச் சோறு, மசித்த பாசிப்பருப்பு இவற்றுடன் பசுநெய் சேர்த்து கொடுப்பது, கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்புச் சத்துக்கள் நேரடியாக உடம்பில் சேரும்.

8-
ம் மாதத்திலிருந்து முட்டையின் மஞ்சள் கரு, ஒரு வயதிலிருந்து முட்டையின் வெள்ளைக்கரு, காய்கறி, தினம் ஒரு கீரையை மசித்துச் சாதத்துடன் கலந்து கொடுத்து வந்தால்... வைட்டமின், தாது உப்புக்கள் போன்ற சத்துக்கள் உடம்பில் சேர்ந்து அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கு மூலாதாரமாக இருக்கும்.
பள்ளிச் செல்லும் பிள்ளைகளுக்கு, நிறைய தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தவேண்டும். பனை வெல்லத்தில் செய்த எள்ளு உருண்டை,, பொட்டுக்கடலை உருண்டை, வேர்க்கடலை உருண்டை தினமும் 2 கொடுக்கவேண்டும். இது நல்ல வளர்ச்சியைக் கூட்டும். ஏதேனும் ஒரு பழம் தினமும் கட்டாயம் சாப்பிடவேண்டும்.
காய்கறிகளில் பாகல், வாழைப்பூ, பச்சடி வகைகள், கிரீன் சட்னி, கேழ்வரகு அடை, புட்டு, முருங்கைக்கீரை, தேங்காய் சேர்த்துக் கொள்ளலாம். சுண்டைக்காய், மணத்தக்காளி, துளசி இவற்றை குழந்தைகளுக்குப் பிடிக்கச் செய்யவேண்டும்.
உளுத்தம் கஞ்சி, பிரண்டை துவையல் அன்றாடம் உணவில் சேர்த்துக் கொண்டாலே போதும். எலும்பு நன்றாக வளர்ச்சியடைந்து உயரமாக வளர வழிவகுக்கும்.

No comments:

Post a Comment